Monday, 2 April 2018

கவிதை


இரவை பொம்மையாக மாற்றல்

கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள்
பகலில் இருந்தபடியே 
இரவை உருவாக்குகிறார்கள்
நீரிலிருந்தபடியே நெருப்பை உருவாக்குவது போல

சில நேரங்களில் 
நைந்த கைக்குட்டை கிழிசல்கள்
விண்மீன்களை உருவாக்கும் 

இரவின் நீளம் 
ஓர் எண்ணில் முடியும் 
10...25...36...50...100 என 
அவ்வப்போது மாறும் 


1,2,3,4,5,8, 17     35     100 என 
அழகிய தவறோடு எண்ணி முடித்த 
அதி சிறுவனை கூட்டித்திரிந்த கடவுள்
எல்லோரையும் கண்டுபிடித்தார் 

...... பின் 
பார்வையற்ற சிறுவனுக்குப் பதிலாக 
எண்ணத் தொடங்கிய கடவுள் 
அவனுடைய இரவை 
எந்த எண்ணில் முடிப்பதென தெரியாமல் 
திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home